Monday, July 21, 2008

முலைகள்

முலைகள்.
முலைகள்சதுப்புநிலக் குமிழிகள்பருவத்தின் வரப்புகளில்மெல்ல அவை பொங்கி மலர்வதைஅதிசயித்துக் காத்தேன்
எவரோடு எதுவும் பேசாமல்என்னோடே எப்போதும்பாடுகின்றனவிம்மலைகாதலைபோதையை….
மாறிடும் பருவங்களின்நாற்றங்கால்களில்கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை
தவத்தில்திமிறிய பாவனையையும்காமச்சுண்டுதலில்இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்சிசு கண்ட அதிர்வில்குருதியின் பாலையும்சாறெடுக்கின்றனஒரு நிறைவேறாக் காதலில்துடைத்தகற்ற முடியாதஇரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்தளும்புகின்றன

No comments: