Tuesday, August 12, 2008

FRIENDSHIP

Friendship is precious!♣ not only in the shade,♣ but in the sunshine of life;♣ and thanks to a benevolent♣ arrangement of things,♣ the greater part of life is sunshine.♣ Of all the blossoms in life's garden,♣ friendship is the most fragrant♣ A friend is a gift where♣ worth cannot be measured♣ except by the heart♣ Be full of sympathy toward each other,♣ loving one another with tender hearts♣ and humble minds♣ Friendship is sharing openly,♣ laughing often,♣ trusting always,♣ caring deeply♣ We can pour our heart out to a friend♣ knowing that gentle hands will take and sift it,♣ keep what is worth keeping,♣ and with a breath of kindness,♣ blow the rest away♣ Thank YOU for being my friend

KANNEER THULIGAL

உனக்கு நான் அனுப்பியகண்ணீர்த் துளிகளைஉப்புத் தயாரிக்கனியுபயூகித்துக் கொண்டாய்.
இருட்டில்நடந்துகொண்டேஉன்நிழல் களவாடப்பட்டதாய்புலம்புகிறாய்
பாறைகளில்பாதம் பதித்துவிட்டுசுவடு தேடிசுற்றிவருகிறாய்.
நீபறக்கவிடும் பட்டத்தின்நூலறுந்ததை மறந்துவிட்டுவாலறுந்ததற்காய்வருந்துகிறாய்.
முதுமக்கள் தாழிக்குள்மூச்சடக்கி முடங்கிவிட்டுசுதந்திரக்காற்றுசிறைவைக்கப் பட்டதாய்அறிக்கைவிடுகிறாய்.
உன்இறகுகளை உடைத்துவிட்டுசிறைகள் திறக்கவில்லையென்றுவாக்குவாதம் செய்கிறாய்.
விரல்களை வெட்டிவிட்டுதூரிகைதொலைந்ததென்றுதுயரப்படுகிறாய்.
சில்லறைகளை சேகரிப்பதில்மூழ்கிவிட்டுமதிப்பீடுகளுக்குக்கல்லறை கட்டுகிறாய்.
நிறுத்திவிடு நண்பனே.நிறுத்திவிடு
சுவாசப்பையைசுத்தீகரிப்பதாய் நினைத்துநாசிகளுக்குள் இனியும்நீர் இறைக்கவேண்டாம்.

ஆழகு பெண்

அழகுப் பெண்ணே.
அழகுப் பெண்ணே.உனக்கு மட்டும்எப்படி வந்தது இத்தனை அழகு.
பூக்கள் பூக்களோடு மோதிமொட்டுக்களுக்குள்வாசனை ஊற்றும் அழகு.
தென்றல் தென்றலோடு மோதிசோலைகளுக்குச்சொடுக்கெடுக்கும் அழகு.
உன் கண்களைக் கண்டதும்ஓர்மின்னல்க்காடு முளைத்ததுஎன் மௌனத்தின் மனப்படுகைகளில்.
உன் அழகை எழுதஎத்தனிக்கும் போதெல்லாம்கனவுகள் வந்துவார்த்தைகளைக் கலைத்துச் செல்கின்றன.
கற்பனைகள் வந்துஎன் கவிதையை எடுத்துச் செல்கின்றன.
முத்துக்களை விழுங்கி நிற்கும்சின்னச் சிப்பியாய்வெட்கத்தில் புதைந்து கிடக்கிறதுஉன் ஆடை.
வானவில்லுக்கு சிறுவண்ணப்பொட்டிட்டதாய்உன் சின்னவிரலில்ஓர் சிங்கார மோதிரம்.
நதிகளுக்குள் சிறுரோஜா மிதப்பதாய்ஒற்றைக்காலில் மட்டும் உனக்குஒய்யாரக் கொலுசு.
இமைகளின் இடைகளிலும்மோகத்தீ ஊற்றி நிறைக்கும்உன்தங்கச் சங்கிலியின்தழுவல்ப் பிரதேசங்கள்.
நீஇமைத்து முடிக்கும்இடைவெளியில்கவனித்தவை தான் இவையெல்லாம்.மற்ற நேரங்களில்என் புதைகுழியே உன் இரு விழிதான்.
நீஒரு வார்த்தை பேசியிருந்தால்நான் ஒருவேளைமூர்ச்சையாகி மடிந்திருக்கலாம்.இல்லையேல்முக்தி நிலையில் முடிந்திருக்கலாம்.
எதுவும் நடக்கவில்லை..ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்உற்சாக ஊர்வலம் செல்வதுபோல்செல்கிறாய்..எனைக் கடந்து.
என்னைத் தொடர்ந்தஎன் சுவடுகள்இப்போதுஎன்னை மட்டும்தன்னந்தனியாய் விட்டு விட்டுபயணித்துக் கொண்டிருக்கின்றன.

Tuesday, August 5, 2008

ஆர்குட்

அதிர வைக்கும் ஆர்குட்
(ஆர்குட்) எனது கட்டுரை,
இணைய உலகில் இன்று தூரம் என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது. ‘போனதும் லெட்டர் போடுப்பா’ என்பதெல்லாம் கி.மு காலத்துக் கலைச் சொற்கள் போல அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாகி விட்டன. இப்போதெல்லாம் மெயிலனுப்புப்பா என்றோ, சாட் பண்றேன் என்றோ, ஆர்குட்ல சந்திப்போம் என்றோ தான் பெரும்பாலும் உரையாடல்கள் நிகழ்கின்றன.
செல்போன்ல பேசறேன் என்பது குறைந்த பட்ச வசதி என்றாகிவிட்டது. இணையத்தில் வரும் வளர்ச்சி தினம்தோறும் புதிது புதிதாய் எதையேனும் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு இணைய உலகில், அதுவும் நட்பு வட்டாரத்துடன் இயங்க விரும்பும் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக இளையவர்களின் உயிர்மூச்சாக இருக்கிறது இந்த ஆர்குட்.
ஆர்குட் வேறொன்றுமில்லை. ஒரு மென்பொருள். தகவல் தொடர்புக்காகவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் பயன்படக் கூடிய ஒரு மென்பொருள். மின்னஞ்சலையும், இணைய அரட்டையையும், இணைய குழுக்களையும், தனி நபர் தளங்களையும் ஒரே இடத்தில் இணைத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்தால் அங்கே ஆர்குட் தெரியும்.
கூகிளில் பணிபுரியும் ‘ஆர்குட் பியூகோட்டன்’ என்பவர் உருவாக்கிய இந்த இணையத்தில் இயங்கும் இணைக்கும் வலை அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ்டர், மை ஸ்பேஸ், கசாக், ஹை-5 என்றெல்லாம் ஏராளம் ‘நெட்வர்க்கிங்’ தளங்கள் இயங்கினாலும் ஆர்குட் தன்னுடைய எளிமைக்காகவும், வசீகரத்துக்காகவும் வென்றிருக்கிறது.
ஆர்குட்டில் ஒருவர் தன்னுடைய தகவல்களை எழுதி இணையும் போது, ஆர்குட்டில் இருக்கும் மற்ற நபர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உருவாகிறது. இணைந்த நண்பர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க, அவரும் இணைய, அவர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க என இந்த சங்கிலி விரிவடைந்து கொண்டே செல்லும் போது பலர் ஆர்குட் டில் இணைகிறார்கள்.
இணைந்தவர்கள் தங்கள் ‘நண்பர் குழு’ வில் சேருமாறு பரிச்சயமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அழைப்பு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அழைக்கப்பட்டவர் அழைத்தவரிடம் இணைகிறார்.
இப்படி சிறு சிறு நண்பர் வட்டாரங்கள் உருவாகும் போது ஒரு நண்பர் தன்னுடைய குழுவில் இருக்கும் இன்னொரு நண்பருடைய குழுவில் இருப்பவர்களுடனோ, அவருடைய நண்பருடைய நண்பரின் குழுவில் இருப்பவருடனோ பரிச்சயமாவதற்கு மிக எளிய வாய்ப்பு உருவாகி விடுகிறது. இந்த வசதி தான் இன்றைய இளையவர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
கல்லூரி காலத்தில் உயிருக்கு உயிராய் பழகி பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கும் நண்பர்கள் பலர் எதேர்ச்சையாக இங்கே சந்தித்துக் கொள்ளும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது. இன்றைய தேதியில் கல்லூரியிலிருந்து வெளிவரும் போது மாணவர்கள் பட்டத்துடன் வருகிறார்களோ இல்லையோ ஆர்குட்டில் உறுப்பினராகி, நண்பர் குழு அமைத்துவிட்டுத் தான் வெளியே வருகிறார்கள்.
தேடல் வசதியையும் இந்த தளம் எளிதாக்கித் தருவதால் பழைய நண்பர்களின் பெயரோ, ஊரோ, பிறந்த நாளோ அல்லது தெரிந்த ஏதேனும் பிற தகவல்களையோ போட்டு அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது ஆர்குட்டில் சுலபம். அந்த நண்பர் ஆர்குட்டில் சேராமல் இருந்தாலோ, அல்லது பொய்யான தகவல்களைக் கொடுத்து இணைந்திருந்தாலோ மட்டுமே கண்டு பிடித்தல் சாத்தியமில்லை.
2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தியதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்குட் முதலில் ஆமை வேகத்தில் நகர்ந்தது. காரணம் இந்த ஆர்குட்டில் இணைய வேண்டுமானால் முன்பே இணைந்த ஏதேனும் நபர்களுடைய அழைப்பு வேண்டும் என்னும் நிபந்தனை. கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த இந்த குழு ஜூலையில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் என்னும் எல்லையை எட்டியது, செப்டம்பரில் அது இரண்டு மடங்கானது.
கடந்த 2006 நவம்பர் ஏழாம் தியதி நிலவரப்படி ஆர்குட்டில் 31,795,208 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், நீங்கள் இதை வாசிக்கும் போது இன்னும் பல இலட்சம் உறுப்பினர்கள் அதிகமாய் இருப்பார்கள். இன்சர்கிள் என்னும் நிறுவனம் தங்கள் சிந்தனையை ஆர்குட் காப்பியடித்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதற்கு அந்நிறுவனம் தரும் ஆதாரம் இன்சர்க்கிளில் இருக்கும் ஒன்பது பிழைகள் ஆர்குட்டிலும் இருப்பது தான் !
பல இணைய குழுக்கள் ஆர்குட் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. இலக்கியம் சார்ந்த குழுக்கள், சினிமா சார்ந்த குழுக்கள், கல்வி சார்ந்த குழுக்கள், சமயம் சார்ந்த குழுக்கள் ஏன் சாதி சார்ந்த குழுக்கள் கூட ஏராளமாய் இங்கே இயங்குகின்றன. நான்கைந்து ஒத்த ரசனையுடைய நண்பர்கள் இணையும் போது அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு குழுவை ஆரம்பிக்க இதில் ஓரிரு நிமிடங்கள் போதுமானது. ஸ்க்ராப் எனப்படும் ஒரு பக்கம் ஒவ்வொரு உறுப்பினருடைய தளத்திலும் இருக்கிறது. இங்கே நண்பர்கள் அரட்டை அடிக்கிறார்கள். இந்த அரட்டைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது ஆர்குட்டில் சிறப்புச் செய்தி.
அதற்காகவே மிகவும் கவனத்துடன் உரையாடல்கள் இங்கே நிகழும், அப்படியும் மீறி ஜொள்ளு வடிக்கும் இளையவர்களை உண்டு இல்லை என்று கலாட்டா பண்ணவே கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது ‘கெத்து தான் ஆம்பளைக்குச் சொத்து’ என்னும் குழு ஒன்று. யாராவது எங்காவது எதிர் பாலினரிடம் வழியும் போது அந்த அரட்டைப் பகுதியை அப்படியே எடுத்துப் போட்டு ‘கலாய்ப்பது’ இந்த குழுவினரின் தலையாய கடமை ! இப்படி இளைஞர்களை சுண்டி இழுக்கும் பல வசீகரங்கள் ஆர்குட்டில் விரவிக் கிடக்கின்றன.
எல்லா இணைய குழுக்களுக்கும் உள்ள குழாயடிச் சண்டைகள் இங்கேயும் உண்டு. வைரமுத்துவா வாலியா, ரஜினியா கமலா, ஐயரா ஐயங்காரா, தமிழனா மலையாளியா, இந்தியனா இந்தியாவை வெறுப்பவனா ? என்று ஆயிரக்கணக்கான குடுமிச் சண்டைக் குழுக்கள் ஆர்குட்டில் இயங்குகின்றன. ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்காக இல்லாமல் பொழுதைப் போக்குவதற்காகவே பெரும்பாலான குழுக்கள் இயங்குகின்றன.
எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு என்னும் நீயூட்டனின் விதியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக வசீகரத்துடனும், நண்பர்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கும் ஆர்குட்டில் பல தில்லு முல்லு வேலைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆர்குட்டில் பாலர் பாலியல் தகவல்களும், வெறுப்பை உருவாக்கும் உரையாடல்களும் அதிகம் உலவுவதாகவும் எனவே ஆர்குட் பயன்பாட்டாளர்களின் தகவல்களை அனைத்தையும் கூகிள் நிறுவனம் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று பிரேசில் அரசு கடந்த ஆகஸ்ட் 22ம் தியதி உத்தரவிட்டது. ஆர்குட் அதை மறுத்து, தங்களிடம் உள்ள தகவல்களைத் தரமுடியாது எனவும், ஆர்குட் தகவல்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருப்பதால் பிரேசில் அரசு தங்களுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி எதிர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.
கடந்த அக்டோ பர் பத்தாம் தியதி ஆர்குட்டில் உள்ள ‘நாங்கள் இந்தியாவை வெறுக்கிறோம்’ என்னும் குழுவிற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம் கூகிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தேசியக் கொடி எரியும் புகைப்படங்கள் பெரிய சர்ச்சையை உருவாக்கின. இந்த குழுவுக்கு எதிராக ‘இந்தியாவை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்கிறோம்’ என்னும் புதிய குழு ஒன்று துவங்கப்பட்டது !
இந்தியாவில் தானே என்னுமிடத்தில் பத்தொன்பது வயதான கல்லூரி மாணவன் ஒருவன் தன்னுடைய கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்துடனும், செல்பேசி எண்ணுடனும் ஆர்குட்டில் ஒரு கணக்கைப் பதிவு செய்து ஆபாச வார்த்தைகளும் அரங்கேற்றிய நிகழ்ச்சி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்காக அவனுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம் என்பது தற்போதைய நிலை.
இதே போல பல குற்றங்கள் ஆர்குட்டில் நிகழ்கின்றன, ஆனால் அவை எதுவும் வழக்காகப் பதிவு செய்யப்படாததால் வெளிவரவில்லை என்று ஆர்குட் பயன்படுத்தும் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இவற்றைத் தடுக்க எந்த வழியும் ஆர்குட்டில் இல்லை என்பதால் பல முன்னெச்சரிக்கை வாதிகள் தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக ஐஸ்வர்ய ராயையோ, அமிதாப்பச்சனையோ துணைக்கு அழைக்கிறார்கள்.
ஆர்குட்டில் புகைப்படங்களையோ, தொலைபேசி எண்களையோ பயன்படுத்த வேண்டாம் என்கிறது காவல்துறை. ஆனால் இணையத்தில் நண்பர்களை நிஜமான அக்கறையுடன் தேடுபவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் இன்றியமையானவையாக இருக்கின்றன. வேலை வாங்கித் தருகிறேன் என்று இயங்கும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்களில் தொலை பேசி எண்களைத் தருகையில் ஆர்குட்டில் தருவதில் தவறில்லை எனும் வாதங்களும் எழுகின்றன.
புகைப்பட நிலையங்களோ, செல்போன் கேமராக்களோ யாருடைய புகைப்படத்தை வெண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அபாயம் தற்போதைய சூழலில் நிலவுகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. தினசரி நாம் எதிர்கொள்ளும் கிரெடிட் கார்ட் தேவையா, வீட்டு கடன் தேவையா, வேலை தேவையா எனும் தொலைபேசி அழைப்புகளே, நம் தொலை பேசி எண்கள் நம் அறிவுக்கு எட்டாமலேயே பல இடங்களில் பதிவாகி இருக்கின்றன என்பதற்குச் சான்று.
ஆர்குட்டில் பாலியல் தவறுகளை ஊக்குவிக்கும் செயல்கள் பல நடக்கின்றன. அதற்காகவே இயக்கும் குழுக்களில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும், தகவல்களும் காணக்கிடைக்கின்றன என்பது அதிர்ச்சியான செய்திகளில் ஒன்று. டேட்டிங் என்னும் பெயரில் இயங்கும் நூற்றுக்கணக்கான குழுக்கள் மாநில வாரியாக பெயர்களை வைத்துக் கொண்டு பாலியல் தவறுகளை நடத்தி வருவது எதிர்கால இளைஞர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் முக்கிய காரணியாய் விளங்குகிறது.
பாலியல் சார்ந்த இணைய தளங்களை துழாவுவது பெரும்பாலான நிறுவனங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் தடை செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஆர்குட் அதற்குரிய வசதியைச் செய்து தரும் விதமாக பல பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் என குழுக்களை அனுமதித்திருப்பது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் செயல்படும் ஆர்குட் பயன்பாளர்களின் நேரத்தை விழுங்கி ஏப்பம் விடுகிறது.
ஆர்குட் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ அதை உருவாக்கியவருக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிக்குவிக்கிறதாம். தற்போது கணினி துறையில் டாக்டர் பட்டத்துக்காய் முயன்றுவரும் இவருக்கு ஆர்குட் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் தலை மட்டுமல்ல, முழு உடலுமே சுற்றுகிறது. 2009ல் உலகின் பணக்காரர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்று கணிக்கப்பட்டுள்ள இவருக்கு தினசரி 20,000 புதிய நண்பர்கள் சேர்கிறார்களாம். 85ஆயிரம் தகவல்கள் இவருக்காய் தினசரி காத்துக் கிடக்கிறதாம் சுமார் 25 பேரை இதற்காகவே நியமித்திருக்கிறாராம் ஆர்குட்.
ஒருவர் ஆர்குட்டில் இணையும்போது இவருக்கு பன்னிரண்டு டாலர்களும், யாரோ யாரையோ நண்பராய் இணைக்கையில் பத்து டாலர்களும், அதற்கு அடுத்த நிலை நண்பர் இணைகையில் எட்டு டாலர்களும் என யாரோ எங்கோ ஆர்குட்டில் செய்யும் பயன்பாட்டிற்கு ஏற்ப இவருக்கு பணம் கொட்டுகிறது. ஒரு புகைப்படத்தை ஆர்குட்டில் இணைக்கையில் இருநூறுடாலர்கள், யாராவது ஒரு செய்தி அனுப்புகையில் ஐந்து டாலர்கள் , தளத்தை விட்டு வெளியே வருகையில் ஒரு டாலர், என்று எல்லா சிறு சிறு செயல்களுக்கும் இவருக்குக் கிடைக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் இவருடைய ஒரு நாள் வருமானமே ஒரு நாட்டின் வறுமையைப் போக்க இயலும் என்று தோன்றுகிறது. ஆனால் ஆதாரபூர்வமாக கூகிள் நிறுவனமோ, ஆர்குட்டோ இதை வெளியிடவில்லை. இந்த தகவல்கள் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன.
மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன. எதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது. தவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன. கனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

களவி

கலவியின் பயன்கள்
காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் கலவியின் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்றை The National Health Service (NHS) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலவி உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கிறது.
கலவியினால் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கலவியின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை கலவி கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர். அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்படவில்லை என்ற அவர்களுடைய மறுப்புகளையெல்லாம் NHS நிராகரித்துவிட்டது. இவை நீரூபிக்கப்பட்ட உண்மைகளே என தனது தரப்பு வாதத்தை அது முன்வைக்கிறது.
இது மட்டுமன்றி கலவியினால் உடலில் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட கலவி வலுவூட்டுகிறதாம்.
நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இந்த அறிக்கை இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
எப்படியோ, உற்சாகமான உடற்பயிற்சிகளும் உலகில் இருக்கின்றன என்பதை சொல்லும் இந்த அறிக்கையை கலவியர்கள் மன்னிக்கவும் காதலர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

நண்பனுக்கு

உனக்கு நான் அனுப்பியகண்ணீர்த் துளிகளைஉப்புத் தயாரிக்கநீஉபயோகித்துக் கொண்டாய்.
இருட்டில்நடந்துகொண்டேஉன்நிழல் களவாடப்பட்டதாய்புலம்புகிறாய்
பாறைகளில்பாதம் பதித்துவிட்டுசுவடு தேடிசுற்றிவருகிறாய்.
நீபறக்கவிடும் பட்டத்தின்நூலறுந்ததை மறந்துவிட்டுவாலறுந்ததற்காய்வருந்துகிறாய்.
முதுமக்கள் தாழிக்குள்மூச்சடக்கி முடங்கிவிட்டுசுதந்திரக்காற்றுசிறைவைக்கப் பட்டதாய்அறிக்கைவிடுகிறாய்.
உன்இறகுகளை உடைத்துவிட்டுசிறைகள் திறக்கவில்லையென்றுவாக்குவாதம் செய்கிறாய்.
விரல்களை வெட்டிவிட்டுதூரிகைதொலைந்ததென்றுதுயரப்படுகிறாய்.
சில்லறைகளை சேகரிப்பதில்மூழ்கிவிட்டுமதிப்பீடுகளுக்குக்கல்லறை கட்டுகிறாய்.
நிறுத்திவிடு நண்பனே.நிறுத்திவிடு
சுவாசப்பையைசுத்தீகரிப்பதாய் நினைத்துநாசிகளுக்குள் இனியும்நீர் இறைக்கவேண்டாம்.

கவிதை

மின்மினியின் வாலிலேகண்மணியுன் காலிலேநான் ரசிப்பேன் வட்டமிடும் ஒளியையேநீ ரசிப்பாய் நோட்டமிடும் விழியையே.
பட்டுப் பட்டு விரலிலேதொட்டுச் செல்லும் குரலிலேநான் ரசிப்பேன் சின்னஞ் சிறு கிளியையேநீ ரசிப்பாய் எந்தன் சிறு மொழியையே.0
சந்திரன் வருகையில்ராத்திரி தருகையில்நான் விரிப்பேன் சுருட்டிவைத்த மோகத்தைநீ மறைப்பாய் உள்ளங்கைக்குள் வானத்தை.
சத்தங்களும் வீதியில்செத்துவிட்ட மீதியில்நான் கொடுப்பேன் வெட்கம் கெட்ட முத்தத்தைநீ கொடுப்பாய் சத்தமிடும் வெட்கத்தை.
0
வெக்கமாய் வெறிக்கையில்நெட்டி நீ முறிக்கையில்நான் விடுப்பேன் மீண்டுமொரு வேண்டுதல்நீ மறுப்பாய் மீண்டுமொரு தீண்டுதல்.
பக்கமாய் இருக்கையில்பக்குவம் பருகையில்நான் தொடுப்பேன் சின்னச் சின்ன சீண்டல்கள்நீ மறுக்கும் சத்தமெல்லாம் தூண்டல்கள்.
0
சின்ன அதிகாலையில்மின்னுமுந்தன் சேலையில்நான் பிடிப்பேன் மிச்சமுள்ள வாசனைநீ நடிப்பாய் செய்வதாக யோசனை.
சுருண்டுபோன போர்வையில்உருண்டுபோன வேர்வையில்நான் குடிப்பேன் ராத்திரியின் மிச்சமேநீ குடிப்பாய் எச்சிலூறும் அச்சமே.
0
கோழியும் அழைக்கையில்சூரியன் முளைக்கையில்நான் வியப்பேன் இரவு போன வேகத்தைநீ நினைப்பாய் இரவு வரும் நேரத்தை.
தேனிலா முடிகையில்வெண்ணிலா மடிகையில்நான் கடிவேன் தழைய மறுக்கும் தாகத்தைநீ முடிவாய் மூச்சு முட்டும் மோகத்தை.