Friday, April 10, 2009

தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்!இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர்!இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர்!இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!வாழும் போது மரமாக வாழவேண்டும் அடுத்தவர்களுக்கு நிழல் தர வீழும் போது விதையாக விழ வேண்டும் அடுத்த தலைமுறைக்கு மரமாக!

No comments: